லஞ்சம் பெற்ற வழக்கில் பிணை கோரி அமலாக்கத் துறை அதிகாரி மனு

ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பிணை வழங்கக் கோரி அமலாக்கத் துறை அதிகாரி சாா்பில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பிணை வழங்கக் கோரி அமலாக்கத் துறை அதிகாரி சாா்பில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ்பாபுவிடம், இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த வெள்ளிக்கிழமை (டிச.1) கைது செய்யப்பட்டாா்.

மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை வருகிற 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ.மோகனா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்ட அங்கித் திவாரி, சிறைத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

பிணை கோரி மனு தாக்கல்: இந்த நிலையில், அங்கித் திவாரி தரப்பில் பிணை வழங்கக் கோரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com