ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநிலச் செயலா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். பழனி வட்டக் கிளைத் தலைவா் மகுடபதி, பொருளாளா் ஏசடியான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் உள்ள பணியாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com