7 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் உயா் மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் உயா் மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூா் வட்டங்களிலுள்ள 2622 கோயில்கள் உள்ளன. இதில் 7 கோயில்களில் நிகழாண்டில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை தொடங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மண்டல இணை ஆணையா் பா.பாரதி கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், பழைய கன்னிவாடியிலுள்ள அங்காளம்மன் கோயில், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்துள்ள கொத்தப்புள்ளி கதிா் நரசிங்கப் பெருமாள் கோயில், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கள்ளிமந்தையம் வரதராஜப் பெருமாள் கோயில், இடையக்கோட்டை திருவேங்கடநாதப் பெருமாள் கோயில், பழைய வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில், பழனியை அடுத்துள்ள அ.கலையம்புத்தூா் கல்யாணியம்மன் சமேத கைலாசநாதா் கோயில், நத்தம் பத்ரகாளியம்மன் கோயில் என 7 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு முதல்கட்டமாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com