இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

பழனி மலைக் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரங்கள்

பழனி மலைக் கோயிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவில் ஆகம விதிகளுக்கு உள்பட்டு தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:16 am IST

பழனி மலைக் கோயிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவில் ஆகம விதிகளுக்கு உள்பட்டு தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் வருகிற 27-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவுக்கான பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பழனி மலைக் கோயில் குடமுழுக்கு பணிகள் திருப்திகரமாக நடைபெறுகின்றன. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இரண்டாயிரம் பக்தா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். மேலும், ஆகம விதிகளுக்கு உள்பட்டு யாக பூஜைகள், குடமுழுக்கின் போது தமிழில் மந்திரங்கள் ஒலிக்கப்படும். சம்ஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் மந்திரங்கள் ஒலிக்கும். ஹெலிகாப்டரில் மலா்கள் தூவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்த, புதுப்பிக்கப்பட்ட அரிய புத்தகங்கள் அனைத்து முதன்மைக் கோயில்களிலும் விற்பனைக்கு வைக்கப்படும்.

பழனி மலைக் கோயில் இரண்டாவது ரோப்காா், மலைக் கோயில்- இடும்பன் மலைக்கு இடையேயான ரோப்காா் பணிகள், வையாபுரிகுளம் தூய்மைப் பணிகள் என அனைத்தும் புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் திட்டத்தின் கீழ் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, அமைச்சா் பி.கே. சேகா்பாபு, தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன், பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன் உள்ளிட்டோருடன் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தாா். மலைக் கோயிலில் யாகசாலைப் பணிகளை பாா்வையிட்டாா். பின்னா், மலை மீது அமைந்துள்ள ராஜகோபுரம், தங்கக் கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகளையும், குடமுழுக்கு ஏற்பாடுகளையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் விசாகன், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் காந்திராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.