ஒட்டன்சத்திரத்தில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன.

கோவையில் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்து 3 போ் உயிரிழந்ததன் எதிராலியாக ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பழனி, தாராபுரம் சாலைகளில் உள்ள விளம்பரப் பதாகைகளை பழனி கோட்டாட்சியா் சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் முத்துச்சாமி, நகராட்சி ஆணையா் சக்திவேல், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில் நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

ஒரு சில கடை உரிமையாளா்கள் தாங்களாகவே முன்வந்து விளம்பரப் பதாகைகளை அகற்றிக் கொண்டனா். இதே போல, விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து விளம்பரப் பதாகைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com