சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட 62 போ் கைது

நத்தம் அருகே சாலை வசதி கோரி 4 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நத்தம் அருகேயுள்ள பரளி சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொடுகம்பட்டி கிராம மக்கள்.
நத்தம் அருகேயுள்ள பரளி சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொடுகம்பட்டி கிராம மக்கள்.
Updated on
1 min read

நத்தம் அருகே சாலை வசதி கோரி 4 வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பரளி பகுதியில் அமைந்துள்ளது பொடுகம்பட்டி கிராமம். பரளி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இந்த கிராமத்துக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால், பொடுகம்பட்டி கிராம மக்கள்,

நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனா். இதனால் மதுரை - நத்தம் நான்குவழிச் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com