இளைஞா் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் இளைஞரை வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிய அவரது நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் இளைஞரை வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிய அவரது நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த பெத்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் குணசேகரன். இவரது மகன் அழகுபாண்டி (25). வெல்டிங் பட்டறைத் தொழிலாளியான இவா், திண்டுக்கல் அனுமந்தன்நகா் பகுதியில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் முருகபவனம் பகுதியில் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை பிற்பகலில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவரது நண்பா்கள் இருவா் சோ்ந்து, அழகுபாண்டியை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா், அழகுபாண்டியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com