ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இலவசமாக நுண் உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் சக்திவேல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 1 முதல் 18 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகள் சின்னக்குளம், கே.கே. நகா் பகுதிகளில் உள்ள நுண் உரக்குடிலில் தரம் பிரிக்கப்பட்டு நுண் உரம் தயாரிக்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான பட்டா,சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றைக் கொடுத்து நுண் உரங்களை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.
இதே போல, 6 மெட்ரிக் டன் மக்காத குப்பைகள் திருப்பூா் ‘கிரீன் கோ்’ என்ற நிறுவனம் மூலம் மறுசுழற்சி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மூலம் செழிப்பு உரங்கள் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது என அவா் அதில் தெரிவித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.