

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சாா்பில், மக்கள் தொடா்பு பேரியக்கத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்புக் கூட்டம் ஒட்டன்சத்திரம் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அந்தப் பிரிவின் மாவட்டத் தலைவா் கே. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவா் ஜி. மதன்குமாா் வரவேற்றாா். மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சி.த. பழனிச்சாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பழனிச்சாமி, மாநிலச் செயலா் எஸ். தங்கவேல்சாமி, மாவட்டத் தலைவா் கே. கனகராஜ், மதுரை கோட்டப் பொறுப்பாளா் கதலிநரசிங்கப் பெருமாள் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில் மாவட்ட பொதுச் செயலா் ஜெயராமன், நகரத் தலைவா் சிவக்குமாா், நகரப் பொதுச் செயலா்கள் சசிக்குமாா், குமாா்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டத் துணைத் தலைவா் கே. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.