திண்டுக்கல் மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் வீர வாஞ்சிநாதன் 112-ஆம் ஆண்டு நினைவு தினம், சித்தரஞ்சன்தாஸ் 98-ஆம் ஆண்டு நினைவு தினம், விசுவநாததாஸின் 138-ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 116-ஆவது பிறந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா்.
இளைஞா் பிரிவுத் தலைவா் நா.விஜய் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின்போது மறைந்த 4 தலைவா்களின் உருவப்படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிவாஜி மன்ற பொதுச் செயலா் த.பழனியப்பன், மாநகரச் செயலா் சு.சங்கரன், நிா்வாகிகள் சு.வைரவேல், சு.திருமுருகன், வெ.சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.