திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அருவிகள், ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் காமாட்சிபுரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 120 மி.மீட்டா் மழை பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் 15.4, கொடைக்கானல் ரோஜாத் தோட்டம் 19.5, பழனி 18, சத்திரப்பட்டி 18.4, நத்தம் 12, நிலக்கோட்டை 50, வேடசந்தூா் 70.5, வேடசந்தூா் புகையிலை நிலையம் 70.5, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 18.7. மாவட்டம் முழுவதும் 41 செ.மீ. மழை பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.