பழனியில் போகா் ஜெயந்தி விழா

பழனி மலைக் கோயிலில் ஸ்ரீபோகா் சித்தரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பழனி மலைக் கோயிலில் மரகதலிங்கத்துக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகங்களைச் செய்த ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள் உள்ளிட்டோா்.
பழனி மலைக் கோயிலில் மரகதலிங்கத்துக்கு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகங்களைச் செய்த ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

பழனி மலைக் கோயிலில் ஸ்ரீபோகா் சித்தரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு, போகா் பெருமான் வழிபட்ட மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்பாளுக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் ஜம்பு என்ற சண்முகானந்த சுவாமிகள் செய்தாா்.

பின்னா், மரகதலிங்கம் கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு போகா் வழிபட்ட மற்ற சிலைகள், சக்கரங்களுடன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதமாக உருத்திராட்சம், சுவாமி படங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணி, இந்து தமிழா் கட்சி நிறுவனா் இராம.ரவிக்குமாா், மருத்துவா் பன்னீா் செல்வம், பாலசுப்பிரமணிய சுவாமிகள், செல்வநாதன், யோகநாதன் கௌதம் காா்த்தி சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com