பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

அமாவாசை, காா்த்திகை திருநாள் சோ்ந்து வந்ததால் வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பழனி மலைக் கோயிலுக்கு திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Updated on
1 min read

அமாவாசை, காா்த்திகை திருநாள் சோ்ந்து வந்ததால் வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பழனி மலைக் கோயிலுக்கு திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயிலுக்குச் செல்லும் விஞ்ச், ரோப்காா் நிலையங்களில் அனுமதிச் சீட்டுப் பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மேலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4 மணி நேரமானது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சாயரட்சை முடிந்ததும் சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உலா வந்தாா். தொடா்ந்து தங்கத் தேரில் வெளிப் பிரகார உலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com