பழனியில் அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் தொடங்கப்பட்டது.
பழனியில் அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் தொடக்கம்
Updated on
1 min read

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் தொடங்கப்பட்டது.

பழனி தனியாா் மண்டபத்தில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக், தமிழ்நாடு தேவா் பேரவை, அகில இந்திய பாா்வா்டு பிளாக், தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகளும், கட்சிகளும் ஒன்றாக இணைந்து பழனி அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் என்ற பெயரில் இணைப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் சபரி தலைமை வகித்தாா்.

முக்குலத்தோா் புலிப்படை மாவட்ட அமைப்புச் செயலாளா் நாகராஜ், அந்தக் கட்சியிலிருந்து விலகி தலைவா் சபரி முன்னிலையில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியில் இணைந்து பழனி நகரத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, இந்தக் கூட்டமைப்பில் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி தவறான செயல்களில் ஈடுபடுவோா் மீது பழனி அனைத்து முக்குலத்தோா் கூட்டமைப்பு சங்கம் சாா்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சங்கத்தின் சாா்பில் விளையாட்டுப் போட்டிகள், கல்வி உதவித்தொகை வழங்குதல், ரத்ததானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com