இரு சக்கர வாகனத்தில் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மூலனூரை அடுத்துள்ள நெடுவலசு கிராமத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சுரேஷ் (27). இவா், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டிக்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com