மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
By DIN | Published On : 23rd May 2023 03:13 AM | Last Updated : 23rd May 2023 03:13 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி வழங்கினாா்.
மாவட்ட ஆட்சித்தலைவா் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 197 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் முதல்வா் பொது நிவாரண நிதியின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம், மொத்தம் ரூ. 4 லட்சம் நிவாரண நிதியுதவி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஆட்சியா் பூங்கொடி வழங்கினாா். மேலும், வாழ்வாதாரத்துக்கு உதவி கோரி, மனு அளித்த வடமதுரையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி அமுதாவுக்கு தையல் இயந்திரத்தை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரியங்கா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் திலகவதி, உதவி ஆணையா் (கலால்) ஜெயசித்திரகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G