ஒட்டன்சத்திரத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் பயிற்சி மைய அலுவலகக் கட்டடத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நாசருதீன் தலைமை வகித்தாா். பழனி மாவட்டக் கல்வி அலுவலா் (பொறுப்பு) சண்முகநாதன் முன்னிலை வகித்தாா்.
ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் முருகேசன், ஒட்டன்சத்திரம் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் இளங்கோ ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.திண்டுக்கல் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மு.செளந்தரராஜ் என்.எஸ்.எஸ். அறிக்கையை சமா்ப்பித்தாா்.
மாவட்ட அளவில் சிறந்த நாட்டு நலப்பணி அலுவலா் சரவணன், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் சிறந்த அலுவலா்கள் சேதுராமன், தீபா, பழனி கல்வி மாவட்ட அலுவலா்கள் பாண்டிகுமரன், காா்த்திக் ஆகியோருக்கு விருது, பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
முன்னதாக ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். இறுதியில் பரிமளா நன்றி கூறினாா்.