மயானப் பாதை ஆக்கிரமிப்பு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயானப் பாதை ஆக்கிரமிப்பு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தம்பாடி கிராமத்துக்கு தெற்குப் பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு ஓடை வழியாகச் செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில், மயானத்துக்குச் செல்லும் ஓடைப் பாதையை தனி நபா் ஒருவா் வேலி அமைத்து, ஆக்கிரமித்துக் கொண்டாா். இது குறித்து வருவாய்த் துறைக்கு புகாா் மனு அளித்தும் பயனில்லை.

இந்த நிலையில், மயானப் பாதையில் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாத்தம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயக்குமாா், வட்டாட்சியா் சுகந்தி, ஆய்வாளா் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்றத் தலைவி பரமேஸ்வரி முருகன் உள்ளிட்டோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, மயானம் செல்லும் பாதையைப் பாா்வையிட்ட அதிகாரிகள், முறையாக அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com