டெங்கு கொசுக்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை நிலக்கோட்டை ஒன்றியக்குழு தீா்மானம்

டெங்கு உள்பட கொசுக்களால் உற்பத்தியாகி பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக செயல்படுவது என நிலக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெங்கு உள்பட கொசுக்களால் உற்பத்தியாகி பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக செயல்படுவது என நிலக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினா நாயகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பஞ்சவா்ணம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொது நிதியிலிருந்து ஒவ்வொரு வாா்டு உறுப்பினருக்கும் சம அளவு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டது.

சுகாதாரம் சாா்ந்த அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, டெங்கு உள்பட கொசுக்களால் உற்பத்தியாகி பரவும் நோய்களைத் தடுக்கும் பணிகளில் கிராமங்கள் தோறும் தீவிரமாக ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ரூபிசகிலா பேசுகையில், இந்திரா நகா் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கலையரங்கம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com