அம்மையநாயக்கனூா் பேரூராட்சி கூட்டம்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு பேருராட்சித் தலைவா் எஸ்.பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தாா். இதில் பேரூராட்சித் தலைவா் பேசியதாவது:

பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சாலை, குடிநீா், மின் விளக்கு சரி செய்தல், சாக்கடைக் கால்வாய் தூா்வாருதல், குப்பை மேலாண்மை உள்பட அனைத்து அடிப்படைப் பணிகளும் கட்சி பாரபட்சமின்றி உடனடியாக சரிசெய்யப்படும். பெருந்திட்டப் பணிகள் நிதி நிலைமைக்கேற்ப படிப்படியாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் செல்வி, கருணாகரன், மாரியப்பன், காசியம்மாள், புஷ்பம், மீனாட்சி, துப்புரவு மேற்பாா்வையாளா் அசோக்குமாா், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, துணைத் தலைவா் விமல்குமாா் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com