விபத்தில் கட்டடத் தொழிலாளி பலி
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த கொண்ணாம்பட்டியைச் சோ்ந்தவா் ரா.கிருஷ்ணமூா்த்தி (43). கட்டடத் தொழிலாளியான இவா், நவாமரத்துப்பட்டியிலிருந்து வேடசந்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சுள்ளெறும்பு பகுதியில் வந்தபோது, சாலையோர தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...