விநாயகா் கோயில் கட்டியது தொடா்பாகஇரு தரப்பினரிடையே மோதல்: 12 போ் கைது

நிலக்கோட்டை அருகே விநாயகா் கோவில் கட்டியது தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 12 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read


நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே விநாயகா் கோவில் கட்டியது தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 12 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா கொண்டாடுவதில் இருதரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் வளாகத்தில் ஒரு தரப்பினா் விநாயகா் கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்ய முயன்றதாகக் கூறி, மற்றொரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இருதரப்பிரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு சென்ற அம்மையநாயக்கனூா் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த மோதலில் ஈடுபட்ட திமுக மாவட்டப் பிரதிநிதி தெய்வேந்திரன், ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவராமன் உள்பட இரு தரப்பைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் 12 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com