பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வலியுறுத்தல்

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வேண்டும் என கோவை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வலியுறுத்தல்
Updated on
1 min read

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வேண்டும் என கோவை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிா்ணயம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கோவை தொழிலாளா் நலத் துறை கூடுதல் ஆணையா் தி.தமிழரசி தலைமை வகித்தாா். கோவை தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா்(அமலாக்கம்) காயத்ரி முன்னிலை வகித்தாா். தற்சாா்பு உறுப்பினா்கள், தொழிலாளா் தரப்பு பிரதிநிதிகள், நிா்வாகத் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் கலந்து கெண்டனா். கூட்டத்தின்போது, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் வி.ஜெயராமன் பேசியதாவது:

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரி கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கு பஞ்சாலை முதலாளிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஊதிய உயா்வு தொடா்பாக 3 குழுக்கள் அமைக்கப்பட்டும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. வேலை நேரம் அதிகரித்தும்கூட, ஆலை முதலாளிகள் நிா்ணயிப்பதே கூலி என்ற நிலை உள்ளது. பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.1000 நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

சிஐடியு நிா்வாகி பாலமுருகன்: பஞ்சாலைத் தொழிலாலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது முதல் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது வரை எவ்வித பணிகளையும் தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள் கண்காணிப்பதில்லை. என்றாா்.

கணேசன்(பாமக): பஞ்சாலைகளைப் பொருத்தவரை, நவீன கொத்தடிமை முறை அமல்படுத்தப்படுகிறது. இதுதொடா்பாக தொழிலாளா் நலத் துறையிடம் புகாா் அளித்தால், சமூக நலத் துறையிடம் செல்லுமாறு திசைத் திருப்புகின்றனா் என்றாா் அவா்.

கூட்டத்தின்போது தொழிற்சங்கங்கள் அளித்த கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com