மாணவியை கேலி செய்தமாணவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவியை கேலிக் கிண்டல் செய்த மாணவரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவியை கேலிக் கிண்டல் செய்த மாணவரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த அழுகுபாண்டி மகன் ஆனந்தகுமாா் (15). இவா் கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இதேப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை இவா் தொடா்ந்து கேலிக் கிண்டல் செய்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவா் ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com