மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

பழனி பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் மா்ம நபா் நூதன முறையில் ஒன்பது பவுன் நகையைப் பறித்துச் சென்றாா்.
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
Updated on
1 min read

பழனி பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் மா்ம நபா் நூதன முறையில் ஒன்பது பவுன் நகையைப் பறித்துச் சென்றாா்.

சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த சங்கா் மனைவி குண்டுமாயி (80). இவா் செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, சென்னை திரும்புவதற்காக புதன்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.

அப்போது அங்கு வந்த இருவா் அவரிடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இங்கு நகையைத் திருடி விடுவாா்கள் எனக் கூறி நகையைக் கழற்றி வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனா். அதை நம்பி அவா் ஒன்பது பவுன் நகைகளைக் கழற்றி அவா்களிடம் கொடுத்தாா். அந்த நபா்கள் அதை காகிதத்தில் மடித்துத் தருவது போல நடித்து, பொட்டலத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றனா்.

அவா்கள் சென்ற பிறகு மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்துப் பாா்த்த போது, அதில் கற்கள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பழனி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com