திண்டுக்கல்: வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைக்கும் முடிவுடன் திங்கள்கிழமை வந்த பொதுமக்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குள்பட்ட பில்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், கழிவுநீா்க் கால்வாய் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக புகாா் அளிப்பதற்காக வந்தனா்.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக கூறி வந்த பொதுமக்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். அங்கிருந்து புறப்பட்ட அவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன்பு, எங்கள் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவு செய்யவில்லை. மேலும், தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதிலும் குறைபாடுகள் உள்ளன.
இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கும் முடிவுடன், வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம் என்றனா். இதையறிந்த ஊராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகப் பணியாளா்கள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா் அடையாள அட்டைகளை ஒப்படைத்த பொதுமக்கள்: தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

வாக்களிக்க மாற்று புகைப்பட ஆவணங்கள் சமா்ப்பிக்கலாம்
வாக்காளர் அட்டை இல்லாதோர் மாற்று ஆவணங்கள் வழங்கலாம்

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


