தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பழனி பேருந்து நிலையத்தில் அலைக்கழிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

பழனி பேருந்து நிலையத்தில் அலைக்கழிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

பழனி: பழனி பேருந்து நிலையத்தில் முறையான அறிவிப்பு பலகை உள்ளிட்ட வசதிகளை செய்து தரமால் கொடைக்கானலுக்கு செல்வதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளை போக்குவரத்து நிா்வாகம் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பழனிக்கு வந்துவிட்டு இங்கிருந்து கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனா். பொதுவாக, கொடைக்கானலுக்கு பழனி, மதுரையில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் பழனி வழியாகவே மலையேறுகின்றனா்.

பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுப் பேருந்துகள் மூலமாகவே பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், பழனி பேருந்து நிலையத்தில் தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவித்தாலும் அது போதிய அளவில் இல்லை. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மாலை 6 மணிக்கு பேருந்து உள்ளதால் பிற்பகல் வேளையில் ஏராளமானோா் வருகின்றனா்.

பழனி பேருந்து நிலையத்தில் கொடைக்கானல் பேருந்துக்கு என தனி நிறுத்தமும், முன்பதிவு செய்வதற்கான இடமும் உள்ளது. ஆனால், அங்கு போதிய அறிவிப்புப் பலகைகள் இல்லாததால், வெளியூா், வெளிமாநில பயணிகள் திண்டாடும் நிலை உள்ளது. முன்பதிவுக்கு டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், அவையும் உரிய நேரத்தில் போதிய அளவில் வழங்கப்படுவதில்லை. மேலும், பதிவு செய்ய வேண்டுமெனில் பயணிப்போா் மட்டுமே வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே, திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து மண்டல மேலாளா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.