மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

செப்.9 வரை வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், திண்டுக்கல்லில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஆகஸ்ட் 2024, 1:42 am IST

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், திண்டுக்கல்லில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(மதுரை), திண்டுக்கல் மண்டல அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு விவரம்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் திருவிழா ஆக.29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலத்தின் சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 29) முதல் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமாா் 60 சிறப்புப் பேருந்துகள் திண்டுக்கல்லிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து திண்டுக்கல்லுக்கும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.