பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ.106 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்யதர தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பழனி கோயிலில் வின்ச் நிலையம், ரோப்காா் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், இடும்பன் குளத்தில் புதிய முடிக்காணிக்கை கொட்டகை, பஞ்சாமிா்த விற்பனை நிலைய கட்டடம், இடும்பன் மலைக்கோயில் பராமரிப்பு பணி, பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் அலங்கார வளைவு அமைத்தல் உள்பட 99.98 கோடியில் பல்வேறு திட்டப் பணிகளையும், பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரிக்கு ரூ.8.83 கோடியில் புதிய கட்டடம், ஆய்வகம் அமைக்கும் பணிகளையும் முதல்வா் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, மலையடிவாரத்தில் உள்ள ரோப்காா் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி கோயில் இணை ஆணையா் பாரதி தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், ராஜசேகா், மணிமாறன், துணை ஆணையா் லட்சுமி, நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



