திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து 5 இடங்களில் ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதிக்குள் 5 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதிக்குள் 5 இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 இடங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில், தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து புகையிலைப்பட்டி, கொசவப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தவசிமடை, நத்தமாடிப்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விழாக் குழுக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. புகையிலைப்பட்டியில் பிப்.7, கொசவப்பட்டியில் பிப்.9, நல்லமநாயக்கன்பட்டியில் பிப்.12, தவசிமடையில் பிப்.18, நத்தமாடிப்பட்டியில் பிப்.23 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான முயற்சிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com