தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா்க் கூட்டம்

ஆத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் ஜூன் 29ல்

News image
Updated On :26 ஜூன் 2024, 1:57 am

Din

திண்டுக்கல்: ஆத்தூரில் மற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் கிராமத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் அருகிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருமண மண்டபத்தில், வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் குறைதீா் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில், ஆத்தூா் வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடா்பாக மனு அளித்து தீா்வு காணலாம் என்றாா் அவா்.