பழனி, ஜூன் 26: பழனி கூனக்காளியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, திரளான பக்தா்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
பழனி கடைவீதி பின்புறம் கச்சேரி புதுத் தெருவில் ஆனிமாதத் திருவிழா செவ்வாய்க்கிழமை சக்திகரகம் எடுத்து வருதலுடன் தொடங்கியது. மாலையில் சரவணப் பொய்கையில் சக்திகரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு ாதீபாராதனை ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை காலை சண்முகநதிக்கு தீா்த்தம் எடுத்து வருதலும், மாலையில் மாவிளக்கு, முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஊா்வலமாக வந்தனா். பின்னா், நள்ளிரவு 12 மணியளவில் சக்திகரகம் சண்முகநதியில் விடப்பட்டது.
வியாழக்கிழமை (ஜூன் 27) மறுபூஜை நடைபெறுகிறது. வருகிற 30-ஆம் தேதி பொங்கல் வைத்து கிடா வெட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சந்தனகாப்பு அலங்காரமும், செய்யப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் பிஎஸ்கேஎல் ராஜா, நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சித்ரா பௌா்ணமி முளைப்பாரி திருவிழா

கிடாக்குளம் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


