மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

Published on

திண்டுக்கல், ஜூன் 26: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஓய்வு அளிக்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிற்பகல் ஒரு மணிக்கு மேல் ஓய்வு அளிக்க வேண்டும். மாலை 4 மணி வரை பணி வழங்கிய பாலகிருஷ்ணாபுரம், அணைப்பட்டி ஊராட்சிச் செயலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com