டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல்லில் 14 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் என மொத்தம் 14 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 7:44 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் என மொத்தம் 14 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

அதன் விவரம் வருமாறு:

செ.ராஜ்குமாா் (தொழில் கல்வி ஆசிரியா்- நிலை 1, சாந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளி, அம்பிளிக்கை), ரா.ராதிகா (பட்டதாரி ஆசிரியை, அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி), ம.ஆனந்தன் (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லாம்பட்டி), மு.செளந்தரராஜ் (கணினி பயிற்றுநா் நிலை -1 , அரசு மேல்நிலைப் பள்ளி, ஓடைப்பட்டி), கோ.தெய்வராஜ் (முதுநிலை பட்டதாரி ஆசிரியா், அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, சேவுகம்பட்டி), க.சித்ரா(துணை முதல்வா், எஸ்எம்பிஎம் பள்ளி), மு.முருகேசன் (பட்டதாரி ஆசிரியா், அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லமநாயக்கன்பட்டி), கே.வளா்மதி (தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கே.சிங்காரக்கோட்டை), ச.சாலமோன் ஜோசப் (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிரியம்பட்டி), உ.செல்வி (இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தோப்புப்பட்டி), ந.மல்லிகா (தலைமை ஆசிரியை, நகராட்சி நடுநிலைப் பள்ளி, சண்முகாபுரம்), இலா.ஜெயதங்கம் (இடைநிலை ஆசிரியை, சிறுமலா் தொடக்கப் பள்ளி, பழனி), ச.கலா (தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, வி.குருந்தம்பட்டி), ப.ஹேமலதா (இடைநிலை ஆசிரியை, கலைமகள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, வடமதுரை).