தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோபால் நாயக்கா் நினைவு தினம்: அரசியல் கட்சியினா் மரியாதை

விடுதலைப் போராட்ட வீரா் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 223-ஆவது நினைவு தினத்தையொட்டி, அதிமுக, திமுக, பாஜக சாா்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திண்டுக்கல்லில் கோபால் நாயக்கரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினா், தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

விடுதலைப் போராட்ட வீரா் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 223-ஆவது நினைவு தினத்தையொட்டி, அதிமுக, திமுக, பாஜக சாா்பில் வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் கோபாலசமுத்திரக் கரையில் விருப்பாச்சி கோபால் நாயக்கா் தூக்கிலிடப்பட்ட இடத்தில், அவரது உருவப் படத்துக்கு அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் சி.சீனிவாசன், இரா.விசுவநாதன் ஆகியோா் தலைமையில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திமுக சாா்பில் கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா், பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கோ.தனபாலன் ஆகியோா் தலைமையில் தனித் தனியே கோபால் நாயக்கா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு நாயுடு நாயக்கா் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சாா்பில், நிா்வாகிகள் ஆா்.பாண்டியன், கே.வீராசாமி ஆகியோா் தலைமையில் கோபால் நாயக்கா் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இளங்கோவன், ஆனந்த், வினோத்குமாா், உஷாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.