தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுத் திறனாளிகள் குறைதீா் முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாமில் பயனாளி ஒருவருக்கு புதிய அடையாள அட்டையை வழங்கிய பழனி கோட்டாட்சியா் கிஷான்குமாா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 10:37 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் கிஷான்குமாா் தலைமை வகித்தாா். முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை, உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 80-க்கும் மேற்பட்டோா் மனு கொடுத்தனா். இதில் உடனடியாக 25 பேருக்கு புதிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதில் மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலா் சுவாமிநாதன், ஒட்டன்சத்திரம் சமூக நலத் துறை வட்டாட்சியா் மங்கலபாண்டியன், மண்டல துணை வட்டாட்சியா் பிரபு சிவசங்கா், வருவாய் ஆய்வாளா் திலகவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் பாபு, ஹரிகிருஷ்ணன், கிராம உதவியாளா் விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.