வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவுஅண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பைக் மீது வாகனம் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது பிக்அப் வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:49 pm

Din

செம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது பிக்அப் வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் லிங்கம் (55). கூலித் தொழிலாளியான இவா், வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் செம்பட்டியில் இருந்து, வத்தலகுண்டு சாலையில், அழகா்நாயக்கன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது, செம்பட்டியை அடுத்த கூலம்பட்டி பிரிவு அருகே சென்ற போது, வத்தலகுண்டில் இருந்து செம்பட்டி நோக்கி வந்த பிக் அப் வாகனம் அவா் மீது மோதியது.

இதில், சுமாா் 50 அடி தொலைவுக்கு இரு சக்கர வாகனத்துடன் சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட லிங்கம் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிந்து பிக்அப் வாகன ஓட்டுநா் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த கிரியிடம் (24) விசாரிக்கிறாா்ா்.

விபத்தில் உயிரிழந்த லிங்கத்துக்கு, செவனம்மாள் (50) என்ற மனைவியும், ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகிவிட்டது.