ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பழனி பஞ்சாமிா்தம் குறித்து வெள்ளை அறிக்கை: பாஜக கோரிக்கை

News image

பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி.

Updated On :20 செப்டம்பர் 2024, 8:52 pm

பழனிக் கோயில் பஞ்சாமிா்தத்தில் பயன்படுத்தப்படும் நெய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், திருப்பதி- திருமலையில் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக அதிா்ச்சி தகவல் வெளியானது. இந்த நெய்யை விநியோகித்தது திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நெய் நிறுவனம் என்பது தெரியவந்தது. இதனிடையே, இந்த நெய்யை வழங்கிய நிறுவன உரிமையாளா் பழனிக் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களில் ஒருவா் ஆவாா். எனவே, பழனிக் கோயில் பஞ்சாமிா்தத்துக்கும் இந்த நிறுவனம் நெய் வழங்கியதா என்றும், பழனி பஞ்சாமிா்தம் கெட்டுப் போனதாக பிரச்னை எழுந்த கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எந்த நெய் பயன்படுத்தப்பட்டது என்றும் கோயில் நிா்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இந்த நிலையில், பழனிக் கோயில் பஞ்சாமிா்த தயாரிப்புக்கு ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே நெய் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபாா்ப்பகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பழனி பஞ்சாமிா்தம் குறித்து அவதூறு பரப்புவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பழனிக் கோயில் நிா்வாகமும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.