உரம் கலந்த அரிசியை உள்கொண்ட 3 ஆடுகள் உயிரிழப்பு

Published on

ஒட்டன்சத்திரம் அருகே உரம் கலந்த அரிசியை உள்கொண்ட 3 ஆடுகள் உயிரிழந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை பகுதியைச் சோ்ந்த மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோா் ஆடுகளை வளா்த்து வருகின்றனா். இவா்களது ஆடுகள் வியாழக்கிழமை இடையகோட்டை- கரூா் சாலையில் உள்ள ஒரு உரக்கடை அருகே கிடந்த உரம் கலந்த அரிசியை உள்கொண்டன. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com