தோ்தலுக்காக மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தவில்லை: அமைச்சா் இ. பெரியசாமி
மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை தோ்தலுக்காக செயல்படுத்தவில்லை என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட பித்தளைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) சிறப்பாக முடியட்டும். புதிய வாக்காளா் பட்டியல் வரட்டும். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று பாா்ப்போம். பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். மக்களுக்கு குறைவு இல்லாத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுப்பாா்.
திமுக ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டும் அரசாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவதில் உண்மையில்லை. எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு ஊராட்சித் துறைக்கு 22 ஆயிரம் கி.மீட்டரில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் கிராம சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
10 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக, வீடுகளை கவனிக்கவில்லை. 20 ஆண்டுகளாக பழுது நீக்கம் செய்யாமல் இருந்த வீடுகளை ரூ.2ஆயிரம் கோடியில் சீரமைத்துள்ளோம். பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தோ்தலுக்காக மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்பட வில்லை. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை, முதல்வா் நிறைவேற்றுகிறாா் என்றாா் அவா்.

