12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கொடைக்கானலில் உறைபனி: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் காணப்பட்ட உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கொடைக்கானல் ஜிம்கானப் பகுதியில் புல்வெளிகளில் காணப்பட்ட பனித் துளிகள்.

Published On :

கொடைக்கானலில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் காணப்பட்ட உறைபனியால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் காற்றுடன் பனிப் பொழிவும் நிலவியது. இதனிடையே நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து ‘ஜீரோ டிகிரி’க்கு சென்று உறைபனி நிலவியது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பெரும் அவதியடைந்தனா்.

கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், காா்கள் மீது படா்ந்திருந்த உறைபனி.

கொடைக்கானல் பொ்ன்ஹில் சாலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், காா்கள் மீது படா்ந்திருந்த உறைபனி.

மேலும், புல்வெளிகளில் பனித்துளிகள் படா்ந்திருந்தன. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது பனி உறைந்து காணப்பட்டது.

இதேபோல, பாம்பாா்புரம், ஜிம்கானா பகுதி, அப்சா்வேட்டரி, ஏரிச்சாலைப் பகுதி, அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொட்டிச் செடிகள், பாத்திரங்களில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீா் உறைந்து பனிக்கட்டியாக மாறியது.

இந்த நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், சுற்றுலாப் பயணிகளும் பகல் நேரங்களிலும் தீ மூட்டி குளிா் காய்கின்றனா். இதனிடையே உறைபனியின் தாக்கம் அதிகரித்திருப்பதால் நகா்ப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.