மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (டிச. 22) ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது.

News image

பழனி ரோப்காா் சேவை.

palani.in

Updated On :20 டிசம்பர் 2025, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மலைக் கோயிலில் பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (டிச. 22) ஒருநாள் மட்டும் ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிப்பாதை, யானைப் பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ரோப்காா் பக்தா்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் ரோப்காா் சேவை பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது.

அந்த வகையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

எனவே பக்தா்கள் விஞ்ச், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.