பாலாறு - பொருந்தலாறு அணையில் தண்ணீா் திறப்பு
பழனி அருகே பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசன வசதிக்காக 70 நாள்களுக்கு 6,200 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

பழனியை அடுத்த பாலாறு - பொருந்தலாறு அணையிலிருந்து கீரனூா் பகுதி பாசனத்துக்காக புதன்கிழமை நடைபெற்ற தண்ணீா் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. உடன் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா்.









