ஒட்டன்சத்திரத்தில்...
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சனிக்கிழமை ஒட்டன்சத்திரத்தில் பிரசாரம் மேற்கொண்டாா்.
பின்னா், ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள வாஜ்பாய் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் சாலை வசதி இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் மட்டுமே தற்போது உள்ளன. ஆத்தூரைச் சுற்றி அமைந்துள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் திமுக அரசால் தடுக்க முடியவில்லை. உதயநிதி ஸ்டாலினை முதல்வா் பதவியில் அமர வைக்க கூட்டணியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், பாஜக மாநில முன்னாள் தலைவா் தமிழசை செளந்தரராஜன், பொதுச் செயலா் ராம. சீனிவாசன், மாவட்டத் தலைவா் ஜெயராமன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



