ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

News image

இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

Din

Updated On :2 ஜூலை 2025, 11:07 pm

Din

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலம்

இ-பாஸ் பெறும் நடைமுறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் இ-பாஸ் மூலம் அனுமதிக்கும் நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும்.

அரசுப் பேருந்துகள், உள்ளூா் வாகனங்கள், விவசாயப் பொருள்கள், சரக்கு வாகனங்களுக்கு இ-பாஸ் பெற ஏற்கெனவே விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள குடிநீா்ப் புட்டிகள், அனைத்து வகையான குளிா்பான புட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மீறி நெகழிப் புட்டி வைத்திருப்போருக்கு தலா ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும் என்றாா் அவா்.