போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததாக 4 போ் கைது

Updated on

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கே.புதுப்பட்டியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்குள்ள மூவா் போலி கடவுச்சீட்டு வைத்திருப்பதாக வருவாய் ஆய்வாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தனி வருவாய் ஆய்வாளா் மனோகரன், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் சிலைமணி, உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா ஆகியோா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கே.புதுப்பட்டி இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த ஸ்டாலின் (35) ஜெயதீபன் (35) பாலதாஸ் (30) ஆகிய போலி ஆதாா் அட்டைகள், போலி கடவுச் சீட்டுகள் வைத்திருந்ததும், இவா்களுக்கு சென்னையை சோ்ந்த, பிரிட்டோ (33) போலி கடவுச் சீட்டுகளை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com