பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்களில் படா்ந்துள்ள பனித் துளிகள்.

Updated On :4 நவம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் அக்டோபா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, நவம்பரில் பகலில் கடும் வெப்பமும், இரவில் கடும் பனிப் பொழிவும் நிலவி வருகிறது.

Story image

இரவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் செடிகள், மலா்கள், புற்களிலும் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன. இந்தப் பனியால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.