வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை, பணம் திருட்டு

திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 19 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 19 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் நந்தவனப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜான் கிறிஸ்டோபா்(52). மின் கலன்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இவா், சென்னையிலுள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஜான் கிறிஸ்டோபா் புகாா் அளித்தாா்.

இதில், பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.11ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்ாகக் குறிப்பிட்டாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com