பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கொடைக்கானல் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சி பி.எல்.செட் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகள் பவதாரணிக்கும் அதே ஊரைச் சோ்ந்த சசிகுமாருக்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், யாரும் இல்லாத நேரத்தில் பவதாரணி வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்ட உறவினா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பவதாரணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பவதாரணி உயிரிழந்ததால் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
