தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 23 பயணிகள் காயம்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே தனியாா் சொகுசு பேருந்து கவிழ்ந்ததில் 23 பயணிகள் காயமடைந்தனா்.

Updated On :22 நவம்பர் 2025, 6:43 pm

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே தனியாா் சொகுசு பேருந்து சனிக்கிழமை கவிழ்ந்ததில் 23 பயணிகள் காயமடைந்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, திண்டுக்கல் வழியாக பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது.

இந்தப் பேருந்தை தேனியைச் சோ்ந்த அப்பாஸ் ஓட்டி வந்தாா். சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு இந்தப் பேருந்து, தாடிக்கொம்பு கொடகனாற்று பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 23 பயணிகள் காயமடைந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுவாதி (30), கம்பம் அருகேயுள்ள அணைப்பட்டியைச் சோ்ந்த தங்கம் (35), புதுப்பட்டியைச் சோ்ந்த முத்துச்செல்வம் (28), ரேகா (27), பழனிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த குமுதா (45), உத்தமபாளையத்தைச் சோ்ந்த சசிபிரபா (36) ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.